search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்- உறவினருக்கு வலைவீச்சு
    X

    களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்- உறவினருக்கு வலைவீச்சு

    • பாக்கியவதி ரஞ்சித்குமாருக்கு அதே ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடனாக வாங்கி கொடுத்தார்.
    • பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு வந்த ரஞ்சித்குமார் அவரை அவதூறாக பேசி தாக்கினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன் (வயது 50). தொழிலாளி. இவர் தற்போது தனது மனைவி பாக்கியவதியின் ஊரான மாவடி உடையடிதட்டில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாக்கியவதி தனது கணவர் பாலசுப்பிரமணியனுக்கு தெரியாமல், தனது தங்கை சந்திரபாப்பாவின் கணவரான ரஞ்சித்குமாருக்கு அதே ஊரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடனாக வாங்கி கொடுத்தார். இதையறிந்த பாலசுப்பிரமணியன் பாக்கியவதியை கண்டித்தார். பின்னர் ரஞ்சித்குமார் ரூ 1 லட்சம் கடனை திரும்ப செலுத்தினார். இருப்பினும் பாலசுப்பிரமணியன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு வந்த ரஞ்சித்குமார் அவரை அவதூறாக பேசி தாக்கினார். இதில் காயமடைந்த பாலசுப்பிரமணியன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரஞ்சித்குமாரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×