search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில்  விவசாயிக்கு கொலை மிரட்டல்
    X

    மேட்டுப்பாளையத்தில் விவசாயிக்கு கொலை மிரட்டல்

    • சித்தா டாக்டர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்ப கவுண்டர் மகன் பாலசுப்பிரமணியம்(56). விவசாயி.

    இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி தனது மாடுகள் மீது ஆசிட் வீசியதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மதியம் 3.30 மணிக்கு மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் பாலசுப்பிரமணியம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் பங்களா மேடு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்(51), அவரது மகன் சேதுபதி (35) ஆகியோர் பாலசுப்பிரமணியத்தை தகாத வார்த்தையால் திட்டினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.இதுகுறித்து பாலசுப்பிரமணியம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பாலசுப்பிரமணியத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரன் சித்தா டாக்டர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளான ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் சேதுபதி ஆகியவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×