search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி காங்கிரஸ் முப்பெரும் விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு
    X

    விழாவில் மாணவி ஒருவருக்கு பரிசு வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.

    ஆறுமுகநேரி காங்கிரஸ் முப்பெரும் விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு

    • காங்கிரஸ் கமிட்டி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாள், சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி தலைமை தாங்கினார். நகர பொதுச்செயலாளர் பழனிவேல், மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்செந்தூர் வட்டார தலைவர் சற்குரு வரவேற்று பேசினார்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், சிவசுப்பிரமணியன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சிந்தியா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். அரசு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் ராஜ்குமார், மாவட்ட அமைப்பு சாரா தலைவர் ராஜகுமாரன், முன்னாள் மாவட்ட பொருளாளர் நடராஜன், ஆழ்வை வட்டார தலைவர் பாலசிங், ஆத்தூர் நகர தலைவர் சின்னத்துரை, ஆறுமுகநேரி நகர துணைத் தலைவர்கள் மூக்கன் கிறிஸ்டியான், சிவகணேசன், செயலாளர் ராஜலிங்கம், முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆல்வின் சேவியர், செயலாளர் சுடலைமணி, மகளிர் பிரிவு துணைத் தலைவர் பாக்கியலட்சுமி, வட்டார துணைத் தலைவர் சந்திரா, மூத்த தலைவர்கள் சண்முகம், செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×