search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
    X

    குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

    • நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • வருகிற 9-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    சமூக பாதுகாப்புத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் இளைஞா் நீதிக் குழுமத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் உதவியாளருடன் இணைந்த தரவு பதிவு செய்பவா் என்ற காலிப்பணியிடத்திற்கு தகுதியான நபா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

    இப்பதவிக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகளை பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை 'மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மோகனூா் சாலை, நாமக்கல் - 637001 என்ற முகவரிக்கு வருகிற 9-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×