search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் இன்று மேலும்  824-பேருக்கு கொரோனா தொற்று
    X

    (கோப்பு படம்)

    தமிழகத்தில் இன்று மேலும் 824-பேருக்கு கொரோனா தொற்று

    • சென்னையில் இன்று மட்டும் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு.
    • கொரோனா பாதிப்பால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.

    தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழகத்தில் இன்று புதிதாக 824 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 156 பேர், கோவையில் 90 பேர், செங்கல்பட்டில் 61 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

    மேலும், 12 வயதுக்குட்பட்ட 62 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 119 முதியவர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்புக்காக மருத்துவமனையில் இன்று 393 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×