search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில்  திருமணம் நிச்சயமான புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    செங்கோட்டையில் திருமணம் நிச்சயமான புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    • கவுசல்யா படிப்பை முடித்துவிட்டு தென்காசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுசல்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்த கண்ணுப்புளி மெட்டு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சண்முக ராஜா(வயது 52). இவரது மகள் கவுசல்யா(26).

    திருமணம் நிச்சயம்

    கவுசல்யா படிப்பை முடித்துவிட்டு தென்காசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர்.

    சமீபத்தில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சய தார்த்தம் நடந்துள்ளது. அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் கவுசல்யா யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுசல்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் வந்து பார்த்தபோது கவுசல்யா அவரது அறையில் பிணமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

    இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த செங்கோட்டை போலீசார், கவுசல்யா உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கவுசல் யாவின் தற்கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×