என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் ரெயில் முன்பாய்ந்து தொழிலாளி தற்கொலை
- தூத்துக்குடி புதியபஸ் நிலையம் அருகே 4-ம் ரெயில்வேகேட் பகுதி வி.எம்.எஸ்.நகர் தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் அதனை அங்கே நிறுத்திவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதியபஸ் நிலையம் அருகே உள்ள 4-ம் ரெயில்வேகேட் பகுதி வி.எம்.எஸ்.நகர் தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அருகே அவரது மோட்டார் சைக்கிளும் நின்றது.
தற்கொலை
இதனை பார்த்த அப்பகுதியினர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
அதில் பலியானவர் தூத்துக்குடி 1-ம் கேட் காமாட்சிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த தச்சுதொழிலாளி செல்வம் (வயது44) என்பது தெரிவந்தது. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் அதனை அங்கே நிறுத்திவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
விசாரணை
இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து செல்வம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றார். செல்வத்திற்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்