search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே  ரெயில் மோதி வாலிபர் பலி
    X

    விழுப்புரம் அருகே ரெயில் மோதி வாலிபர் பலி

    • விழுப்புரம் அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு அலமேலுபுரம் ஜெயலட்சுமி நகரை சேர்ந்தவர் பரத் (வயது 22). மினி லாரி டிரைவர். இவர் இன்று அதிகாலை வண்டிமேடு பகுதியின் அருகே இயற்கை உபாதை கழித்துவிட்டு பின்னர் அதே பகுதியில் உள்ள விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் ரெயில் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பரத் சம்பவ இடத்திலே இறந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இது குறித்து விழுப்புரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் இந்த விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×