என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிழங்கு மில்லில் வேலை பார்த்த வடமாநில தொழிலாளி தற்கொலை
- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, நாமகிரிபேட்டை அருகே உள்ள மெட்டாலாவில் தனியாருக்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு மாவு மில்லில் வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிபேட்டை அருகே உள்ள மெட்டாலாவில் தனியாருக்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு மாவு மில்லில் உத்திரப்பிரதேச மாநிலம் முஸ்தபாத் அருகிலுள்ள முசாத்பூர் பகுதியைச் சேர்ந்த பரோனி என்பவரின் மகன் சுக்பீர் (வயது22) என்பவர் கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.
இவர் மில் உரிமையாளருக்கு சொந்தமான வீட்டில் தங்கி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுக்பீர் செல்போனில் அவரது குடும்பத்தினரிடம் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. அவர் நேற்றும் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் பணி முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக குடியிருந்து வரும் வீட்டிற்கு சென்று விட்டார். இரவு 7 மணி அளவில் சுக்பீர் தான் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அவரை ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையொட்டி அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்