search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல்சாகுபடி கருத்தரங்கு-கண்காட்சி
    X

    ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல்சாகுபடி கருத்தரங்கு-கண்காட்சி

    • தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
    • பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது.

    கோவை:

    ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 28-ந் தேதி நாளை மறு நாள்(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பாக சென்னையில், ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் நிருபர்க–ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நெல் சாகுபடியில் விவசாயிகள் அன்றாடம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஈஷா சார்பில் வேளாண் வல்லுனர்களின் கருத்த–ரங்கமும் கண்காட்சியும் திருச்சியில் நடக்கிறது.

    இதில் பிரபல வேளாண் வல்லுநர் பாமயன், இயற்கை விவசாயத்தின் அவசியம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.

    பூச்சி செல்வம், நெல் பயிரில் பூச்சி மேலாண்மை செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். சித்தர் பாரம்பரிய அரிசியின் மருத்துவ குணங்கள் மற்றும் சந்தை வாய்ப்பு குறித்தும், கால் கிலோ விதை நெல்லில் லாபகரமாக மகசூல் எடுக்கும் நுட்பங்கள் குறித்து ஆலங்குடி பெருமாளும் உரையாற்றுகின்றனர்.

    இது தவிர பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது. இந்த ஒரு நாள் நிகழ்ச்சி திருச்சி இருங்கலூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பிரவீன்குமார் உள்ளனர்.

    Next Story
    ×