search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டுக்கு நடந்து வந்த பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு
    X

    கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள சாலெட்மேரியை பின் தொடர்ந்து வந்து மர்ம நபர்கள் செயினை பறித்த காட்சி.

    வீட்டுக்கு நடந்து வந்த பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

    • நோட்டமிட்டு 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர்.
    • திடீரென மர்ம நபர்கள் பெண் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சி கோட்டை சாலை பாத்திமா நகரை சேர்ந்தவர் பெலிக்ஸ். இவரது மனைவி சாலெட்மேரி (வயது 63 ). இவர் பகலில் கடைக்கு சென்று விட்டு ஷேர் ஆட்டோவில் பாத்திமா நகருக்கு வந்தார்.

    பின்னர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்டு 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர். அவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தும், மற்றொருவர் தொப்பி அணிந்தும் காணப்பட்டனர்.

    வீட்டுக்கு நடந்து வந்த பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்புவீட்டின் அருகே உள்ள வளைவில் சாலெட்மேரி திரும்பி வந்தபோது திடீரென மர்ம நபர்கள் சாலெட்மேரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.

    அதிர்ச்சி அடைந்த சாலெட்மேரி திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் இரண்டு மர்ம நபர்கள் சாலெட் மேரியின் கழுத்தில் இருந்த செயினை அறுத்துக் கொண்டு ஓடிய காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அவர்கள் பற்றிய விவரம் தெரியவில்லை.

    அந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தஞ்சையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×