search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து  1½ வயது குழந்தை பலி
    X

    பாவூர்சத்திரம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்து 1½ வயது குழந்தை பலி

    • குழந்தை அஸ்வந்த் தனது வீட்டின் முன்பு குடிநீருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான்.
    • போலீசார் சிறுவன் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு மனைவி மற்றும் அஸ்வந்த் என்ற 1 ½ வயது மகன் உள்ளனர்.

    நேற்று சிறுவன் அஸ்வந்த் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் முன் பக்கத்தில் குடிநீருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக அவன் தவறி விழுந்தான்.

    வீட்டின் முன்பு விளையாடிய குழந்தையை காணாததால் பெற்றோர் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்தான். அதனை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வீட்டில் விளையாடி க்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெத்தநாடார்பட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Next Story
    ×