search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணகுடியில் சூதாடிய 5 பேர் கைது
    X

    பணகுடியில் சூதாடிய 5 பேர் கைது

    • சீட்டு விளையாடிக்கொண்டிருந்த 5 பேர் கும்பல், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றது.
    • கைதானவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    பணகுடி அருகே உள்ள காட்டுப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பணகுடி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சீட்டு விளையாடிக்கொண்டிருந்த 5 பேர் கும்பல், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றது. போலீசார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    விசாரணையில், அவர்கள் வள்ளியூரை சேர்ந்த செல்வின்துரை(39), மாவடியை சேர்ந்த மைக்கேல் ராஜ், கும்பிளம்பாட்டை சேர்ந்த ராஜா, அருண், செல்வம் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் மற்றும் சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×