search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே வியாபாரியை கத்தியால் குத்திய 5 பேர் கைது
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் அருகே வியாபாரியை கத்தியால் குத்திய 5 பேர் கைது

    • முன்விரோத்தில் வியாபாரியை கத்தியால் குத்தியதால் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • இச்சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ராமர்பி ள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது36). காய்கறி வியாபாரி. இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் இவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து நகர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமாரை கத்தியால் குத்திய மேட்டுப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (வயது 28), தோட்டனூத்தை சேர்ந்த கார்த்திகேயன் (25), ஜம்புளியம்பட்டியை சேர்ந்த மாதவன் (28), பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சேகர் (27), கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த முகேஷ்குமார் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    முன்விரோதம் காரணமாக அவரை கத்தியால் குத்தியதாக அவர்கள் தெரிவித்து ள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×