என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல்லில் வாலிபரை வெட்டி கொன்ற 4 பேர் கைது
- முன்விரோதம் காரணமாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிய வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- கொலையாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் முத்தழகுபட்டிைய சேர்ந்த வின்சென்ட் மகன் எட்வின்சோபத்(25). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஆர்.வி.நகர் முனியப்பன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த எட்வின் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முத்தழகுபட்டியை சேர்ந்த வெஸ்லின்அபிஷேக்(23), நவீன்ராஜா(25), எடிசன் சக்கரவர்த்தி்(22), எவின் (21) ஆகியோர் ெகாலை செய்தது தெரியவந்தது.
அபிஷேக்கின் சகோதரியை எட்வின்சோபத் காதலித்து வந்ததாகவும், சம்பவத்தன்று அவருடன் தனிமையில் இருந்ததை கண்டித்ததாகவும் இதனால் அவர்களுக்குள் முன்விேராதம் ஏற்பட்டது. இதனால் அபிஷேக் தனது நண்பர்களுடன் சேர்ந்த எட்வின்சோபத்தை வெட்டிவிட்டு அவரது பெற்றோருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்