என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல்லில் நடன கலைஞரை குத்தி கொல்ல முயன்ற 4 பேர் கைது
- பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் நடன கலைஞரை ஒரு கும்பல் கத்தியால் குத்தினர்.
- இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் என்ற தேவா. இவர் திண்டுக்கல் விஜய் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். இவரது மகன் மோகன்பிரகாஷ்(24). இவரும் கக்கன் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(20) என்பவரும் நடனக்குழு ஆரம்பிக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எம்.காலனியில் நடனக்குழுவை அமைத்தனர்.
ஆனால் அதில் போதிய வருவாய் கிடைக்காததால் நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து தமிழ்ச்செல்வன் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு மோகன் பிரகாசிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று நடனப்பள்ளி அருகே மோகன்பிரகாஷ் நடந்து வந்த போது தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த மோகன்பிரகாசை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி ஆகியோர் வழக்குபதிவு செய்து மோகன்பிரகாசை கத்தியால் குத்திய தமிழ்ச்செல்வன், கக்கன்நகரை சேர்ந்த சங்கர்கார்த்திக்(22), சங்கரபாண்டி(18), தமிழரசன்(22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்