என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா விற்பனை ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேர் கைது
- தேனி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ்ேடாங்கரே உத்தரவின்பேரில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த ஒரே குடும்பத்தினர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ்ேடாங்கரே உத்தரவின்பேரில் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி பலர் கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
கடமலைக்குண்டு பகுதியில் நூதனமுறையில் ஆட்ேடாவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பாலூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் பாலூத்து கிராமத்தை சேர்ந்த ஜெயபால்(55), அவரது மகள் சத்யா(39), மகன் ஜெயசூர்யா(38) மற்றும் ஆட்டோ டிரைவர் சுந்தரபாண்டி(23) ஆகிய 4 பேரும் சேர்ந்து ரூ.1லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் மேலும் ஆட்டோ மற்றும் அவர்களிடமிருந்த ரூ.40ஆயிரம் பணத்தையும் கைப்பற்றினர். இந்த கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்தார்கள். யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்றார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்