என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கஞ்சா விற்ற 4 பேர் கைது
- தஞ்சை வடக்கு வாசலில் சிலர் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதை பார்த்த 4 பேர் தப்பி ஓட முயன்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை வடக்கு வாசலில் சிலர் திருட்டுத்தனமாக கஞ்சா விற்பதாக மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாபு, காவலர்கள் அம்பிகாபதி, அப்துல்லா, ஜானகிராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசார் வருவதைப் பார்த்த 4 பேர் தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் தஞ்சாவூர் சேவப்ப நாயக்கன்வாரி நடுக்குளத்தை சேர்ந்த வருண் விஜய் (வயது 19), செக்கடி முருகன் காலனியை சேர்ந்த வீரன் (18), சேவப்ப நாயக்கன்வாரி மேல் கரையை சேர்ந்த முகமது ரபீக் ( 22), மானோஜியப்பா வீதியை சேர்ந்த சுரேஷ் பாண்டியன் (45) என்பதும் அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருண் விஜய், வீரன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்