என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆறுமுகநேரி பகுதியில் மது, லாட்டரி விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்11 Oct 2022 7:51 AM GMT
- ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபகுமார், சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
- அரசு முத்திரையுடன் கூடிய 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபகுமார், சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆறுமுகநேரி பஜார் அருகே மது விற்பனை செய்த கீழ நவ்வலடிவிளையைச் சேர்ந்த இன்பகரன் (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து அரசு முத்திரையுடன் கூடிய 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் காயல்பட்டினம் பூந்தோட்டம் அருகே மது விற்பனை செய்ததாக வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேகர் (64) என்பவர் கைது செய்யப்பட்டார்.இவரிடமிருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் ஆறுமுகநேரி சிவன் கோவில் அருகே பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இசக்கிமுத்து (60) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 61 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X