search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே பள்ளி மாணவன் உள்பட 3 பேர் மாயம்
    X

    கோப்பு படம்

    தேனி அருகே பள்ளி மாணவன் உள்பட 3 பேர் மாயம்

    • தேனி மாவட்டத்தில் 3 பேர் மாயமாகினர்
    • பள்ளி மாணவன் மற்றும் 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

    தேனி:

    தேனி அருகே தப்புக்குண்டுவை சேர்ந்தவர் மாரிச்சாமி மனைவி சித்ரா(31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த சித்ரா திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தும் கிடைக்காததால் வீரபாண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து சித்ராவை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி ராதாருக்மணி(28). சம்பவத்தன்று கடைவீதிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் மகன் மாதவன்(16). இவர் 11-ம் வகுப்பு முடித்து 12-ம் வகுப்பு செல்ல இருக்கிறார். விடுமுறை தினத்தில் அருகில் உள்ள பாட்டி வீட்டில் தூங்குவது வழக்கம். நேற்று அங்கு சென்ற மாதவன் தனது நண்பர் வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×