என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிங்காநல்லூர் அருகே பிளஸ்-1 மாணவனை தாக்கிய 3 பேர் கைது
- மாணவன் உப்பிலிபாளையம் வரதராஜபுரத்தில் நடந்து சென்றார்.
- 3 பேரும் சேர்ந்து மாணவனை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கினர்.
கோவை
கோவை நீலிகோணாம்பாளையம் 3-வது தெருவை சேர்ந்தவர் 17 வயது மாணவன். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாணவன் உப்பிலிபாளையம் வரதராஜபுரத்தில் நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த 3 வாலிபர்கள், சிறுவனை பார்த்து ஏன் எங்கள் தெருவில் சுற்றுகிறாய்? என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு முற்றி வாக்குவாதமாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து மாணவனை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கினர்.
மேலும் கத்தியால் தாக்கியதில் மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் மாணவனை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தாக்கிய உப்பிலிபாளையம் காந்திநகரை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் கவுதம்(20), உப்பிலிபாளையம் சி.எம்.சி. காலனியை சேர்ந்த தொழிலாளி விக்னேஷ்(23) மற்றும் சுனில்குமார்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல், விக்னேஷ் போலீசில் அளித்த புகாரில், மாணவன், அவனது நண்பருடன் சேர்ந்து தங்களை தாக்கியதாக புகார் அளித்தார். அதன்பேரிலும் போலீசார் மாணவன் மற்றும் அவரது நண்பர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்