search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காரமடையில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் சரண்யா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சரண்யா படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தார். கடந்த 22-ந் தேதி  இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார். 

    இதனால் மனவேதனை அடைந்து சரண்யா வீட்டில் இருந்து எலி மருந்தை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக சரவண்யாவை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை பேரூர் அருகே உள்ள நொய்யல் ஆற்று பாலத்தில் 60 வயது மதிக்க தக்க மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பேரூர் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×