search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    செல்போன் பறித்த வாலிபர் கைது

    மதுரையில் கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மதுரை


    மதுரை பேச்சியம்மன் படித்துறை, வியாசராயபுரம் மடம் சந்து பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் நந்தகுமார் (வயது 19). இவர் கோரிபாளையம் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் எல்.என்.பி. அக்ரகாரம் தெருவில் உள்ள அக்கா வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் தெருவில் நந்தகுமாரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். இருள்மறைவான பகுதிக்கு சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்றான்.

    இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மதுரை மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமலநாதன், பன்னீர் செல்வம் மற்றும் ஜெகதீசன், சுந்தரம், அன்பழகன், இதயச்சந்திரன்,  கணேஷ்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். 

    அதில் மோட்டார் சைக்கிள் பதிவு எண்கள் கண்டறியப்பட்டன. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து செல்லூர் கீழத்தோப்பு மார்கண்டேயன் மகன் வீரபிரபு (22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரை திலகர் திடல் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் மாரி மகன் கோபி (வயது 20). இவர் மாநகராட்சியில் சுத்திகரிப்பு ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று நள்ளிரவு இவர் மேல மாரட் வீதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அங்கு வந்த வாலிபர் ஒருவர் செல்போனை பறித்து கொண்டு தப்பினார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதன் அடிப்படையில் போலீசார் சக்கிமங்கலத்தில் பதுங்கி இருந்த மேலவாசல் ஆறுமுகம் மகன் செல்வம் (வயது 20) என்பவரை கைது செய்தனர்.  இவர் மீது தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் தங்கச்சங்கிலி பறித்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. 

    Next Story
    ×