என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேன்கனிக்கோட்டை அருகே குடிபோதையில் கிணற்றில் மூழ்கி பூ வியாபாரி சாவு
Byமாலை மலர்27 May 2022 10:08 AM GMT (Updated: 27 May 2022 10:08 AM GMT)
தேன்கனிக்கோட்டை அருகே குடிபோதையில் கிணற்றில் மூழ்கி பூ வியாபாரி பலியானார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தேர்பேட்டை சாலை தெரு பகுதியை சேர்ந்தவர் அப்பைய்யா மகன் ரவி (வயது 38). பூ வியாபாரம் செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று தன் நண்பர்களுடன் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அர்த்த கூர் கிராமத்திலுள்ள வெங்கடசாமி என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
நண்பர்களுடன் கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்த ரவி நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக நண்பர்கள் ரவி வீட்டிற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் தேன்கனிக்கோட்டை எஸ்.ஐ .கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்துரவியின் தங்கை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தேன்கனி கோட்டைபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X