search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சாயர்புரம் அருகே தொழிலாளி தற்கொலை

    சாயர்புரம் அருகே உள்ள குமாரபுரத்தில் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 54). இவரது மனைவி சரோஜினி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 

    ஆபிரகாம் தோட்டத்திற்கு பூச்சி மருந்து அடிக்கும் கூலி வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு காயத்தால் அவதிப்பட்டு வந்தார். 

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் மதுவில் விஷம் கலந்து குடித்தார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸில் அழைத்து சென்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் மோகன் ராஜ் சாயர்புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×