search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் அருகே பைக் விபத்தில் கணவருடன் சென்ற பெண் பலி

    வேலூர் அருகே பைக் விபத்தில் கணவருடன் சென்ற பெண் பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    ஆரணி அருகே உள்ள பனையூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கோகிலா (வயது 41) இவர்கள் இருவரும் நேற்று வேலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    கண்ணமங்கலம் கூட் ரோடு அருகே வந்தபோது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.

    இதில் கோகிலவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கோகிலா இறந்தார்.இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×