search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 பேர் ரத்ததானம் வழங்கியய காட்சி.
    X
    100 பேர் ரத்ததானம் வழங்கியய காட்சி.

    குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர்கள் 100 பேர் ரத்ததானம்

    குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர்கள் 100 பேர் ரத்ததானம் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமிற்கு வேலூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் எஸ்.காவேரியம்மாள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பி.வாசுகி முன்னிலை வகித்தார். 

    குடியாத்தம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி சார்பாக மருத்துவ அலுவலர் மாறன்பாபு தலைமையில் மருத்துவர்கள் மாலதிசெல்வம், முனிரத்தினம் ஆகியோர்கொண்ட மருத்துவ குழுவினர் மாணவர்களிடம் ரத்ததானம் பெற்றனர் இந்த முகாமில் 100 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினார்கள். 

    இந்நிகழ்ச்சியில் கல்லப்பாடி சமுதாய சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் பாபு, பிரேம்குமார், கல்லூரி நாட்டு நலப்பணி அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×