என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஜவ்வாதுமலை பகுதியில் ரூ.40 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள்
Byமாலை மலர்26 May 2022 10:27 AM GMT (Updated: 26 May 2022 10:27 AM GMT)
ஜவ்வாதுமலை பகுதியில் ரூ.40 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் ெதாடங்கப்பட்டது.
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை யூனியனில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் பிரதாப் தலைமை வகித்தார். எம்எல்ஏ, தி.சரவணன் முன்னிலை வகித்து பேசினார். யூனியன் சேர்மன் ஜீவா வரவேற்றார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்பி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது
திருவண்ணாமலை எம்பி தொகுதியின் மொத்தம் ஆறு தொகுதிகள் உள்ளது இந்த ஆறு தொகுதிகளில் வருடம் ஒன்றுக்கு ஏதேனும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அந்த கிராமத்தை அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து மேம்படுத்தப்பட வேண்டும் இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு கலசபாக்கம் தொகுதியில் உள்ள காந்தபாளையம் கிராமத்தை தேர்வு செய்யப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டு ஜவ்வாதுமலையிலுள்ள கோவிலூர் ஊராட்சியை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் அடிப்படைத் தேவைகளான ஐந்து பணிகளை முதலில் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்க இன்று ஒர்க் ஆர்டர் வழங்கப்படுகிறது.
மேலும் ஜவ்வாது மலை பஸ் நிலையம் அதற்காக எனது நிதியிலிருந்து ரூ.15 லட்சமும் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சமும் ஒதுக்கீடு செய்து பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய தாக பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது.
மேலும் ஜவ்வாது மலையில் அரசின் நேரடி திட்டங்களாக கடந்த ஆண்டு ரூ.17 கோடியில் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு நெடுஞ்சாலைத் துறை வனத்துறை சுற்றுலாத் துறை பொதுப்பணித் துறை அற நிலையத் துறை ஆகிய துறைகளிலிருந்து ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் இப் பணிகள் தொடங்கி முடியும் தருவாயில் மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X