என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தரிசு நிலத்தில் வேம்பு வளர்க்க மானியம்
Byமாலை மலர்26 May 2022 10:26 AM GMT (Updated: 26 May 2022 10:26 AM GMT)
தரிசு நிலங்களில், எண்ணெய் வளம் மிகுந்த வேம்பு வளர்க்கவும், உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயி ஒருவரின் வேம்பு மரக்கன்றுகளை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருப்பூர்:
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் பயறுவகை தானியம், ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள், மர எண்ணெய் வித்து பயிர்கள், எண்ணெய் பனை திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.தரிசு நிலங்களில், எண்ணெய் வளம் மிகுந்த வேம்பு வளர்க்கவும், உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், 2.47 ஏக்கர் பரப்பில் வேம்பு நடவு செய்ய, 17 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.மேலும், கூடுதலாக நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு, ஊடு பயிரிடுதல் மற்றும் பராமரிப்பு மானியமாக 3,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
மானியத்தில் நடவு செய்து பயனடைந்த, குளத்துப்பாளையம் விவசாயி ஒருவரின் வேம்பு மரக்கன்றுகளை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தரிசு நிலத்திலும், வருவாய் பெற, தேசிய உணவு பாதுகாப்பு திட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X