என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெகமத்தில் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்26 May 2022 10:04 AM GMT (Updated: 26 May 2022 10:04 AM GMT)
இந்த இரு சம்பவங்கள் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெகமம்:
நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக்(21). கட்டிடத்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளது. அதிகளவில் மது குடித்து வந்ததால் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பூச்சி மருந்து குடித்து மயங்கினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெகமம் அடுத்த பனப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(51). விவசாயி. இவரது மனைவி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து சுப்பிரமணியம் தனது தாயுடன் வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் பூச்சி மருந்து குடித்து மயங்கினார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X