search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்
    X
    கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்

    ஜூன் 1-ந் தேதி வரை ஜமாபந்தி - கலெக்டர் தகவல்

    திருவாரூர் மாவட்டத்தில் ஜூன் 1-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுவதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி–கிருஷ்ணன் வெளியிட்டுள்ள ெசய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் வருவாய் துறையின் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்த மாதம் 1-ந் தேதி வரையில் (சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக) அந்தந்த வட்டத்திற்குரிய தேதிகளில் தினசரி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. 

    அதன்படி நாளை வரைக்கும் திருவாரூர் வட்டத்தில் கலெக்டர் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டத்தில் மன்னார்குடி ஆர்.டி.ஒ தலைமையிலும், வலங்கைமான் வட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், குடவாசல் வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், கூத்தாநல்லூர் வட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையிலும் நடைபெறுகிறது. 

    மேலும் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தலைமையிலும், நன்னிலம் வட்டத்தில் திருவாரூர் ஆர்.டி.ஓ தலைமையிலும் வரும் 31-ம் தேதி வரையில் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியானது நடைபெறுகிறது. 

    மேலும் மன்னார்குடி வட்டத்தில் ஜுன் 1-ந் தேதி வரையில் டி.ஆர்.ஒ தலைமையில் நடைபெறுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை தங்களது வட்டத்திற்குரிய வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×