search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    சங்கரன்கோவில் அருகே மணல் திருடிய 3 பேர் கைது

    சங்கரன்கோவில் அருகே மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்
    தென்காசி:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளத்தை அடுத்த ராமசாமியாபுரம் ரெயில்வே பாலம் அருகே மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாதவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த 5 பேரை சுற்றி வளைத்தனர். 

    ஆனால் அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மணல் திருடியது அதே பகுதியை சேர்ந்த மதியழகன், மனோஜ்குமார், தேவராஜ், கலைக்குமார் மற்றும் மணிசேகர் என்பது தெரியவந்தது.  இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட தேவராஜ், கலைக்குமார் மற்றும் மணிசேகர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    தலைமறைவான டிராக்டர் உரிமையாளர் மதியழகன் மற்றும் டிரைவர் மனோஜ் குமார் ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து டிராக்டர் மற்றும் 1 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×