என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே மணல் திருடிய 3 பேர் கைது
Byமாலை மலர்26 May 2022 7:15 AM GMT (Updated: 26 May 2022 7:15 AM GMT)
சங்கரன்கோவில் அருகே மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்
தென்காசி:
சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளத்தை அடுத்த ராமசாமியாபுரம் ரெயில்வே பாலம் அருகே மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மாதவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த 5 பேரை சுற்றி வளைத்தனர்.
ஆனால் அதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மணல் திருடியது அதே பகுதியை சேர்ந்த மதியழகன், மனோஜ்குமார், தேவராஜ், கலைக்குமார் மற்றும் மணிசேகர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட தேவராஜ், கலைக்குமார் மற்றும் மணிசேகர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவான டிராக்டர் உரிமையாளர் மதியழகன் மற்றும் டிரைவர் மனோஜ் குமார் ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து டிராக்டர் மற்றும் 1 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X