என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரக்கோணம் அருகே தம்பதி கொலையில் 5 தனிப்படை விசாரணை
Byமாலை மலர்25 May 2022 11:21 AM GMT (Updated: 25 May 2022 11:21 AM GMT)
அரக்கோணம் அருகே தம்பதி கொலையில் 5 தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
காஞ்சிபுரம் மாவட்டம் அரசன் தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 51). இவரது மனைவி ராணி (47) இருவரும் நெசவுத் தொழில் செய்து வந்தனர்.
இவர்கள் இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சாலை கைலாசபுரம் ஏரி கால்வாய் ஓரத்தில் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.
கடன் பிரச்சினை காரணமாக மாணிக்கம் ராணி ஆகியோரை காரில் கடத்திச் சென்று அடித்து கொலை செய்து வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தையும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து டி.ஜ.ஜி. ஆனி விஜயா விசாரணை நடத்தினர். பின்னர் அரக்கோணம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:-
இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளில் விரைவில் பிடித்து விடுவோம். கொலைக்கான சரியான காரணத்தை குற்றவாளிகளை பிடித்த பின்னரே கூற முடியும் ராணி மற்றும் மாணிக்கம் உடல்களில் காயங்கள் உள்ளன.
குறிப்பாக நெஞ்சுப்பகுதியில் எலும்பு உடைந்து உள்ளது. எனவே பலமாக தாக்கி அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் அதற்கான தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.
5 தனிப்படை போலீசார் இந்த கொலை சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்கள் காஞ்சீபுரம், சென்னை, அரக்கோணம், திருவள்ளூரில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X