search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிக்கு மருந்து தெளிப்பான் எந்திரத்தை போச்சம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தமூர்த்தி வழங்கினார்.
    X
    விவசாயிக்கு மருந்து தெளிப்பான் எந்திரத்தை போச்சம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தமூர்த்தி வழங்கினார்.

    போச்சம்பள்ளியில் விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் வழங்கல்

    போச்சம்பள்ளியில் மருந்து தெளிப்பான் எந்திரத்தை ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தமூர்த்தி வழங்கினார்.
    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், விதைகள், தென்னங்கன்று, இயற்கை மண்புழு உரம், உயிர் மருந்து உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் விழாவை முதலமைச்சர் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரும், ஒன்றிய செயலாளருமான சாந்தமூர்த்தி தலைமையில் பயனாளிகளுக்கு விவசாய பொருட்களை வழங்கினார்.

     இந்நிகழ்ச்சியில் பர்கூர் ஒன்றிய குழு துணை தலைவர் மணிமேகலை அருள்குமார், மாவட்ட பிரதிநிதி, நேதாஜி, பர்கூர் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவுதம், குமரன், செந்தில்நாயகம், இளையராஜா, கிளை செயலாளர்கள் பிரபுகுமார், நாகராஜ், திருஞானம், முருகன் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள், விவசாயிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் வேளாண்மை அலுவலர் நன்றி கூறினார்.
    Next Story
    ×