search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முன்னீர்பள்ளம் அருகே கார் மோதி முதியவர் பலி

    நெல்லை முன்னீர்பள்ளம் அருகே கார் மோதி முதியவர் பலியானார்.
    நெல்லை:

    முன்னீர் பள்ளம் அருகே உள்ள கொலுமடை கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 65).

    இவர் நேற்று அப்பகுதியில் நெல்லை-பாபநாசம் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.  

    பின்னர் அவர் சாலையை கடக்க முயன்றார்.  அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனையில் அனு மதித்தனர்.  

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனினும் சிகிச்சை பலனளிக்கா மல் கணபதி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×