search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ,
    X
    ,

    மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

    சேலம் அன்னதானப்பட்டியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்
    சேலம்

    சேலம் தாதாகாப்பட்டி சீரங்கன் தெருவை சேர்ந்தவர்  தர்மன். இவரது மகன் குப்புராஜ் (வயது 35). இவர் நேற்றிரவு  வீட்டில் துணி துவைத்து காய போட முயன்றார். 

    அப்போது அந்த வழியாக சென்ற மின்கம்பியில் துணி பட்டதால்   மின்சாரம் தாக்கி திடீரென தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியி–லேயே அவர் பரிதாபமாக   இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.  

    தகவல் அறிந்த  அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×