search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை வார்டு.
    X
    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை வார்டு.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை சிகிச்சை வார்டு

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    மதுரை


    நாடு முழுவதும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20 படுக்கைகள் உடைய குரங்கு அம்மை பிரத்யேக சிகிச்சை வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

    இங்கு அனைத்து படுக்கைகளிலும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு முதல் கட்டமாக சிகிச்சை தரும் வகையில் மருந்து-மாத்திரைகளும் தயார் நிலையில் உள்ளன. 

    குரங்கு அம்மை நோயாளிகளிடம் சளி, ரத்தமாதிரி எடுத்து புனே ஆய்வகத்திற்கு அனுப்பவும் தாயார் நிலையில் உள்ளதாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்னவேல் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×