search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெட்ரோல் டீசல் கியாஸ் விலை குறைப்பு மத்திய அரசின் நாடகம்-காங்கிரஸ் குற்றச்சாட்டு

    பெட்ரோல் டீசல் கியாஸ் விலை குறைத்தை மத்திய பா.ஜனதா அரசின் கபட நாடகம் என காங்கிரஸ் குற்றச்சாட்டிள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர்களை ஏமாற்றும் விதமாக 5 மாநில  தேர்தலையொட்டி 5 மாதங்களாக, பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாமல் தற்காலிகமாக மத்திய பா.ஜனதா அரசு நிறுத்தி வைத்தது.

    தேர்தல் முடிந்ததும் தன் சுய ரூபத்தை வெளிப்படுத்தி, 16 நாட்களில் 10 தடவைகளாக ரூ.10-க்கு  மேலாக பெட்ரோல், டீசல் விலையை  ஏற்றியது. சிலிண்டர் விலையை ரூ. 1035-க்கு கொண்டு வந்து  நிறுத்தியது. குறுகிய காலத்தில் பெட்ரோல் விலையை ரூ.26.77 ஏற்றிவிட்டு தற்போது  ரூ. 14.50 மட்டுமே குறைத்து விட்டு  மார்தட்டிக் கொள்வது  மத்திய பா.ஜனதா அரசின் கபட நாடகம்.

    ஆனால் இதே நேரத்தில் பல ஆயிரம் கோடி சொத்து மதிப்பு உடைய மின் துறையின் மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்துவிட்டது. இது புதுவை மக்களுக்கும், மின்துறையில் பணிபுரியும் பொறியாளர்கள், அதிகாரிகள் ஊழியர்களுக்கும்  செய்யும்  துரோகம். 

    ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது வரிகளை உயர்த்தி வறுமைக்கு தள்ளிவிடுவது, அரசு மற்றும் அரசு சார்பு ஊழியர்களை தனியார் ஊழியர்ளாக மாற்றி அவர்களை கார்ப்பரேட்டுகளிடம் கீழ் பணி செய்ய வைப்பதே மத்திய பா.ஜனதா அரசின் பணியாக உள்ளது.

    இத்தகைய பா.ஜனாதாவுக்கு ஆதரவு அளிக்கும் திராவிட கட்சிகளின் நிலை பரிதாபத்துக்குரியது.

    இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
    Next Story
    ×