என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இந்தோனேசிய சிறையில் உயிரிழந்த குமரி மாவட்ட மீனவர் உடலுக்கு விஜய் வசந்த் எம்.பி. அஞ்சலி
Byமாலை மலர்24 May 2022 6:37 AM GMT (Updated: 24 May 2022 10:57 AM GMT)
தூத்தூரை சேர்ந்த மீனவர் மரியஜெசின்தாஸ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்தித்த விஜய்வசந்த் எம்.பி.ஆறுதல் தெரிவித்துள்ளார்
தூத்தூர்:
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த ஜெனோபாவின் மகன் மரிய ஜெசின்தாஸ் (வயது 33).
இவர் உள்பட 4 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி இந்தோனேசியா கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக கடலோர காவல் படையினர் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் உடல் நிலை மோசமடைந்தை அடுத்து மரிய ஜெசின் தாஸ் இந்தோனேசிய சிறையில் உயிரிழந்தார்.
அவரது உடல் இந்தோனேசியா வில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சொந்த ஊரான தூத்தூருக்கு எடுத்து செல்லப்பட்டது
இந்நிலையில் உயிரிழந்த மீனவர் ஜெசின்தாஸ் உடலுக்கு, குமரி தொகுதி எம்.பி. விஜய்வசந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் முக்கிய தலைவர்கள் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜெசின்தாஸ் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்தித்த விஜய்வசந்த் எம்.பி. ஆறுதல் தெரிவித்தார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X