search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரியில் லாரி-பைக் மோதல்: வாலிபர் பலி

    கிருஷ்ணகிரியில்லாரி-பைக் மோதி கொண்டதில் வாலிபர் பலியானார்.
    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஜப்பராபாத்கிராமத்தைச் சேர்ந்தவர் தமீன் (வயது 30). இவர் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் உள்ள மேம்பாலம் பக்கமாக கடந்த 20-ந் தேதி இரவு சென்று கொண்டிருந்தார். 

    அப்போது முன்னால் சென்ற லாரி, திடீரென்று எந்த சிக்னலும் காட்டாமல் பிரேக் பிடித்து நின்றது. இதில் மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி லாரியின் பின்புறம் மோதியது. 

    இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற தமீன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×