என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கணவருடன் பைக்கில் சென்ற ஆசிரியையிடம் 8 பவுன் தாலி செயின் பறிப்பு
Byமாலை மலர்23 May 2022 9:50 AM GMT (Updated: 23 May 2022 9:50 AM GMT)
கணவருடன் பைக்கில் சென்ற ஆசிரியையிடம் 8 பவுன் தாலி செயினை திருட்டு கும்பல் பறித்து சென்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த திமிரி பகுதியை சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி ஜாப்லின் மேரி (வயது 55). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுக்கு அஸ்வினி பிரியா (35)என்ற மகள் உள்ளனர். அஸ்வினி பிரியாவுக்கு திருமணமாகி சிப்காட்டில் வசித்து வருகின்றார்.
இவரைப் பார்ப்பதற்காக ராமனும் ,ஜாப்லின் மேரியும் பைக்கில் நேற்று சிப்காட்டிற்கு சென்றனர். மகளைப் பார்த்துவிட்டு இரவு பைக்கில் கணவன் மனைவி இருவரும் பெரிய உப்புபேட்டை அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஜாப்லின் மேரி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பறித்தார்.
இதில் அதிர்ச்சி அடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
இதுகுறித்து ஜாப்லின் மேரி ஆற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X