search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILEPHOTO
    X
    FILEPHOTO

    அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்

    அடையாளம் தெரியாத வாலிபர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

     திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் டீக்கடை அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். 

    இதுகுறித்து திருச்சி கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன்ராஜ் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார்.

     புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×