search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    திருச்செந்தூரில் அனுமன் சேனா ஆர்ப்பாட்டம்

    திருச்செந்தூரில் அனுமன் சேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருச்செந்தூர்:

    இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் தமிழகத்தில் தொடர்ந்து இந்து கோவில்கள் இடிக்கப்படுவதை கண்டித்தும், டெல்லியில் அனுமன் பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும்,தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரியும் திருச்செந்தூர் பஸ்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து வரவேற்று பேசினார்.மாநில செயல் தலைவர் அருப்புக்கோட்டை சங்கர், மாநில பொதுச்செயலாளர் ரவி கிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் பரமானந்தம் சிவசேனா, மாநில அமைப்பாளர் சசிகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் பாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தங்கராஜ் நன்றி கூறினார்.
    Next Story
    ×