என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொளத்தூரில் கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீசு அனுப்பியதால் இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்22 May 2022 9:41 AM GMT (Updated: 22 May 2022 9:41 AM GMT)
கொளத்தூரில் கணவர் விவாகரத்து கேட்டு நோட்டீசு அனுப்பியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர்:
கொளத்தூர், செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் ரேகா தேவி (வயது38). இவருக்கும் மதுரையை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சதீஷ் தற்போது பெங்களூருவில் உள்ள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். குழந்தை இல்லாத நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக ரேகாதேவி கொளத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது ரேகா தேவி திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் கணவர் பணம் நகை கேட்டு தொந்தரவு செய்வதாகவும் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் மன உளைச்சலில் இருந்ததாகவும் எழுதி உள்ளார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X