search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விரட்டியடிக்கப்பட்ட காட்டு யானை.
    X
    விரட்டியடிக்கப்பட்ட காட்டு யானை.

    காவலூர் பகுதியில் சுற்றிய காட்டு யானை விரட்டியடிப்பு

    காவலூர் பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.
    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த காவலூர் நாயக்கனூர் பகுதிகளை ஒட்டி வனப்பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக ஒற்றைக் காட்டு யானை சுற்றிததிரிகிறது.

    அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்களை துவம்சம் செய்தது. இதுபற்றி வருவதாகவும் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து 12-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் 4 குழுக்களாக பிரிந்து நாயக்கனூர் ,கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    வனத்துறையினர் ஒற்றைக் காட்டு யானையை காவலூரை அடுத்த மலை ரெட்டி ஊர் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.
    Next Story
    ×