search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    குமாரபாளையத்தில் முதியவர் திடீர் சாவு

    குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பஸ் நிலைய பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் ஈரோடு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்று விசாரணை செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×