என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனைவி பிரிந்த ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்22 May 2022 8:34 AM GMT (Updated: 22 May 2022 8:34 AM GMT)
மனைவி பிரிந்த ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர்:
சென்னை பெரம்பூர் ஜமாலியா பகுதியை சேர்ந்தவர் ராஜா (34). ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு 12 வருடத்திற்கு முன்பு புளியந்தோப்பை சேர்ந்த ரேணுகா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ராஜாவுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சில நாட்களுக்கு முன்பு ரேணுகா புளியந்தோப்பில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மன உளைச்சலில் இருந்த ராஜா திரு.வி.க நகரில் உள்ள தந்தை சேகர் வீட்டிற்கு வந்துள்ளார். தந்தை வீட்டின் மின் விசிறியில் ராஜா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திரு.வி.க நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X