search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    நெல்லை அருகே சமையல் மாஸ்டர் சரமாரி வெட்டிக்கொலை

    நெல்லை அருகே சமையல் மாஸ்டர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.இந்நிலையில் முருகன் சரமாரியான வெட்டுக்காயங்களுடன் தோட்டத்தில் மயங்கி கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அங்கு ஓடிச்சென்றனர். பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    கொலை குறித்து தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    முருகனை கொலை செய்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×