search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எச்சரிக்கை
    X
    எச்சரிக்கை

    பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை

    விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் சுப்ரீம் கோர்ட்டு 29.10.2021-ம் தேதியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளவாறு பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலைகளை தொடர் ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில்  தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    தொடர் ஆய்வுகளில் சிறிய அளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இனங்களில் தொடர்புடைய 405 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்கும் குறிப்பாணைகள் வழங்கப்பட்டும், அதிகளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இனங்களில் தொடர்புடைய 174 பட்டாசு ஆலைகளின் படைக்கலச்சட்ட உரிமத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

    மேலும், படைக்கலச்சட்ட உரிமங்கள் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்ட காரணத்தினால், தொடர்ச்சியாக உற்பத்திப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் படைக்கலச்சட்ட உரிமத்தின் மீதான தற்காலிக இடைநிறுத்த ஆணைகள் விலக்கி ஆணையிடப்பட்டுள்ளது. 

    மேலும், இனி வரும் காலங்களிலும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் ஆய்வுக் குழுக்களின் மூலமாக தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×