என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடன்குடி அருகே முத்தாரம்மன் கோவில் கொடை விழா
Byமாலை மலர்21 May 2022 10:56 AM GMT (Updated: 21 May 2022 10:56 AM GMT)
உடன்குடி அருகே வடக்கு பரமன்குறிச்சி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டி நாராயண சுவாமி கோவிலில் குரு பூஜை நடந்தது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட வடக்கு பரமன்குறிச்சி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவையொட்டிகடந்த 15-ந் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீ நாராயண சுவாமி கோவிலில் குரு பூஜை நடந்தது.
தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. 16-ந் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. வருஷாபிஷேகம் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம், இரவு 108 திருவிளக்கு பூஜையும் நடந்தது.
இரவு வடக்கத்தியான் கோவிலில் கொடிய ழைப்பு பூஜை, வில்லிசை நடைபெற்றது. 17-ந் தேதி 108 பால்குட ஊர்வலம், தொடர்ந்து தீர்த்தவாரி மற்றும் நள்ளிரவு நேரங்களில் சிறப்பு அலங்கார தீபாராதனையும் குடும்பம் திருவீதி உலா, நள்ளிரவு ஊர்வலம் நடந்தது.
18-ந் தேதி கும்மிப்பாடல், சிறப்பு பூஜை சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், நடுஇரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. 19-ந் தேதி கொடை விழா நிறைவு பூஜை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், சிறப்பு இன்னிசை கச்சேரி ஆகிய நடந்தது. விழாவில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X